Search This Blog

30 April 2012

தினமும் முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் முடிவு


முட்டை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்ற கருத்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் உடல் எடையை குறைக்க முட்டை ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இங்கிலாந்தில் உள்ள சர்தே பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் உணவு சாப்பிடும்போது ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் போதும். தானாக உடல் எடை குறைந்து விடும் என கண்டறிந்துள்ளனர்.
ஏனெனில் முட்டை சாப்பிடும்போது முழு உணவு உட்கொண்ட திருப்தி ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து நொறுக்கு தீனிவகைகள், பிஸ்கட், கேக் மற்றும் சாக்லேட்டுகளை சாப்பிடும் எண்ணம் வராது.
அதனால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே கருத்தைதான் பேராசிரியர் புரூஷ் கிரிப்பினும் கூறியுள்ளார். எனவே உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி கூடங்களுக்கு அலைந்து திரிய வேண்டாம். சாப்பாட்டின் போது தினமும் ஒரு முட்டை சாப்பிட்டாலே போதும்.

26 April 2012

அதிகமான வைட்டமின்கள் ஆயுளை குறைக்கும்

மனித ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றன. ஆனால் அதே வைட்டமின்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் ஒருவரின் ஆயுளையே குறைக்கக்கூடிய ஆபத்தான நஞ்சாக அவை மாறுகின்றன என்று அமெரிக்க ஆய்வின் முடிவு குறிப்புணர்த்துகிறது.

ஐம்பது வயது முதல் அறுபது வயதுக்கு இடைப்பட்ட சுமார் முப்பத்தி எட்டாயிரம் அமெரிக்க பெண்களின் மருத்துவ சிகிச்சைமுறைகளை ஆராய்ந்த மருத்துவ ஆய்வாளர்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், ஆனாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கூடுதல் வைட்டமின் மாத்திரைகளை இவர்கள் தினசரி உட்கொண்டதாகவும் கண்டறிந்தனர்.

இப்படி தேவைக்கு அதிகமான கூடுதல் வைட்டமின்களை தொடர்ந்து சாப்பிட்டவர்களின் ஆயுட்காலம் அவர்களை ஒத்த மற்றவர்களின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும்போது குறைந்து காணப்பட்டதை இவர்கள் அவதானித்தார்கள். இதைத்தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக கூடுதல் வைட்டமின்களை உட்கொள்வது நன்மை பயக்காது என்பதுடன், ஆபத்தாக முடியும் என்றும் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.


குறிப்பாக, பல்வேறு வைட்டமின்களடங்கிய மல்டிவைட்டமின் மாத்திரைகள், போலிக் அமிலம், வைட்டமின் பி 6, மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள் ஆகியவை தேவைக்கதிகமாக உட்கொள்ளும்போது ஆயுட்காலத்தை அதிக அளவில் குறைப்பதாக இவர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவில் அதிகரித்துவரும் ஒரு ஆபத்தை இந்த ஆய்வின் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக கூறுகிறார் சென்னையைச்சேர்ந்த உணவு நிபுணர் மருத்துவர் கவுசல்யாநாதன். அதாவது, மருத்துவரின் முறையான ஆலோசனை பெறாமல், தாங்களாகவே பல்வேறு வைட்டமின்களை மருந்துகடைகளில் வாங்கி சாப்பிடும் போக்கு இந்திய நடுத்தரவர்க்கத்தினர் மத்தியில் அதிகரித்துவருவதாகவும், இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

22 April 2012

கருவளையமா? – எளிய தீர்வு அகத்தி!

முகத்தின் தன்மையைப் பொருத்து அதை வறண்ட சருமம், எண்ணெய் சருமம், சாதாரண சருமம் என மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு சருமத்துக்கென பிரத்யேக குணங்கள் இருக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரிதான் பராமரிப்பும் இருக்க வேண்டும். ஒரு சருமத்துக்கு ஒத்துக்கொள்வது இன்னொரு வகை சருமத்துக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

வறண்ட சருமத்தை வழவழப்பு சருமமாக மாற்ற இரண்டு பிஞ்சு வெண்டைக்காய், ஒரு சின்ன கேரட், சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு விழுதுபோல நைஸாக அரைக்கவும். இதை முகத்தில் பேக் போல போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் மெருகேறும். இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும்.

கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சினைகள் இருக்காது. அதோடு கருவளையமும் காணாமல் போகும். மேல் உதடு ஒரு நிறமாகவும், கீழ் உதடு ஒரு நிறமாகவும் இருப்பவர்கள் சீமை அகத்திக்கீரை, பச்சைப் பயறு சேர்த்து அரைத்துத் தடவினால் உதடுகளின் நிறம் ஒரே மாதிரியாக மாறிவிடும்.

வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. தினமும் பாதாம், முந்திரி, வேர்க்கடலை என மூன்று வேளையும் ஏதாவது ஒரு பருப்பை ஒரு வேளைக்கு இரண்டு என சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சினைகள் தீரும். கீரை வகைகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்துக்கு முல்தானிமெட்டியுடன் சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் தடவலாம். பாதாம் பருப்பை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தடவிவந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. தக்காளிச்சாறு, வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, வேகவைத்து ஆறியதும் சிறிதளவு தயிர் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பொலிவுபெறும்.

சாதாரண சருமத்துகென பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை. எப்போதும் போல முகத்தைப் பராமரித்து வந்தாலே போதும். கன்னங்கள் ஒட்டிப்போய் இருப்பவர்கள், சாமந்திப் பூ, சிறு பருப்பு சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் கன்னங்கள் உப்பி வரும்.

20 April 2012

தேமல்...! சுலபமா குணமாக்க வழி இதோ!


தேமல் வலி இல்லாத நோய் தான் என்றாலும் அழகை கெடுத்து தன்னம்பிக்கையை குறைத்துவிடும். அதனை போக்க இலகுவான வழி உள்ளது.
தொட்டால் சுருங்கி இலையை அரைத்து துணியினுள் இட்டு அதனை நன்கு பிளிந்து வரும் சாற்றை தினமும் காலையும் மலையும் தேமலின் மீது பூசி வர ஐந்து நாட்களில் தேமல் மறையும்.
தினமும் புதிய இலைகளை பிளிந்து பயன்படுத்துதல் நல்லது. சாற்றை பிளிந்து அதனை சேமித்து மறுநாள் பாவிப்பதை தவிர்ப்பது நல்லது.
தொட்டால் சினுங்கி பற்றி ஓர் குறிப்பு
லகத்தில் முதல் முதலில் இந்த தொட்டா சிணுங்கி தாவரம் South America and Central America, ஆகிய நாடுகளில் காணப்பட்டது . தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில மருந்து வகை மூலிகைகளில் இந்த தாவரமும் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்து இருக்கிறது

18 April 2012

பொடுகா? கவலையை விடுங்க!


       இன்று இளைஞர்களை எரிச்சல்படுத்தும் பிரச்சினைகளில் பொடுகு முக்கியமானது. தலையின் பொலிவை குறைத்து எண்ணெய் வழிந்தால் போல் அசிங்கம் ஆகிவிடும். ஒரு நாள் தலைக்கு குளிக்காவிடினும் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும்.

இதற்கு எளிய தீர்வு உள்ளது… பொடுகை துரத்திவிடலாம்.

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும்.

பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவிடவும்.பொடுகு மறைந்துவிடும்.

17 April 2012

பொடுகா? கவலையை விடுங்க!



இன்று இளைஞர்களை எரிச்சல்படுத்தும் பிரச்சினைகளில் பொடுகு முக்கியமானது. தலையின் பொலிவை குறைத்து எண்ணெய் வழிந்தால் போல் அசிங்கம் ஆகிவிடும். ஒரு நாள் தலைக்கு குளிக்காவிடினும் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும்.

இதற்கு எளிய தீர்வு உள்ளது… பொடுகை துரத்திவிடலாம்.

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும்.

பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவிடவும்.பொடுகு மறைந்துவிடும்.