Search This Blog

17 March 2013

பைபிளில் முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்பு..!

(நிதுர்) சமீபத்தில் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு முந்திய பைபிளில், ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அறிவித்திருப்பது வாடிகனில் தீப்பொறியாக பற்றிக்கொண்டது.

போப் பெனெடிக் XVI பார்க்க விரும்பிய, கடந்த 12 ஆண்டுகளாக துருக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பைபிள் கோஸ்பல் பரனபாஸ் என்பவரால் எழுதப்பட்ட பைபிள் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

தங்க எழுத்துக்களால் அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த பைபிள், 2000 ஆம் ஆண்டு துருக்கியில் ஒரு கடத்தல் நடவடிக்கையின்போது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஆரம்ப கால போதனைகளில் ஒன்றாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அதில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை பிரபல மேற்கத்திய ஆங்கில நாளிதழ் டெய்லி மிர்ரர் - DAILY MIRROR செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஹலால் இலச்சினையும் ஜம்மியத்துல் உலமாவின் புத்திசாலித்தனமான முடிவும்!!!


அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!!!
ஹலால் இலச்சினையை ஜம்மியத்துல் உலமா உள் நாட்டில் வாபஸ் பெற்றும் வெளி நாட்டு ஏற்றுமதிகளுக்கு மட்டும் ஹலால் என்ற ஒரு முடிவை அறிவித்து இருந்தது.

ஆனால் உலமா சபையின் அறிவிப்பு இலங்கை முஸ்லிம்களுக்கு பெரிய வெற்றியே என்று யோசித்து பார்க்கும் முஸ்லிம்களுக்கு புரியும் ...ஏனென்றால்--

1.ஹலால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொடுப்பதனால் இன்னும் ஹலால் செயன்முறை இலங்கையில் உள்ளது..இதன் மூலம் அந்நிறுவனங்கள் இரண்டு முறையில் தயாரிப்புகளை தயாரிக்க முடியாது..இதனால் அவர்களுக்கு பொருட்செலவே அதிகரிக்கும்...ஆகவே அவர்கள் எல்லாவற்றையும் ஹலால் முறையில் தயாரித்து பின்பு பொதி செய்யும் பொழுது ஹலால் முத்திரை வெளிநாட்டினருக்கும் இலங்கைக்கு ஹலால் முத்திரை இல்லாமலும் தான் தயாரிப்பார்கள்...இதன் மூலம் எந்த நிறுவனங்கள் வெளிநாட்டுக்கு ஹலால் செய்கிறார்களோ அவர்கள் முழுமையாக ஹலால் தான் செய்கிறார்கள்....இது மிகவும் பெரிய வெற்றி..


2.ஹலால் இருப்பதால் தான் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன என்று கூறினார்கள்..ஆனால் இப்பொழுது ஹலால் இல்லை எனும் பொழுது எல்லா ஹலால் பொருட்களும் விலை குறைய வேண்டும்...ஆனால் அது நடக்க போகவில்லை என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் கூறியுள்ளது..ஏனென்றால் ஹலால் அவர்களுடைய செலவில் எந்த ஒரு தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பதால்....இதன் மூலம் பொது பல சேனா பெரிய பொய்யர்கள் என்பதை காட்ட