Search This Blog

22 September 2013

அதிர்ச்சி தகவல்_ பாராளுமன்ற, மும்பை தாக்குதல்களின் பின்னணியில் மத்திய அரசு.

அதிர்ச்சி தகவல் 

முஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற,மும்பை தாக்குதல்களின் பின்னணியில் மத்திய அரசு.

பாராளுமன்றத் தாக்குதலையும், மும்பை தாக்குதலையும் திட்டமிட்டு நடத்தியது மத்திய அரசு என்றும், தீவிரவாத தடுப்புச் சட்டங்களை உருவாக்கவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டு பிரபலமான ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இஷ்ரத் வழக்கில் மத்திய அரசுக்காக பிரமாணப்பத்திரம் தயாரித்த முன்னாள் அண்டர் செகரட்டரி ஆர்.வி.எஸ்.மணி, சதீஷ் வர்மா இவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு பா.ஜ.க அரசு பொடா சட்டத்தை கொண்டுவந்ததும், மும்பை தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு UAPA சட்டத்தைக் கொண்டுவந்ததையும் இதற்கு ஆதாரமாக சதீஷ் வர்மா சுட்டிக்காட்டினார் என்று ஆர்.வி.எஸ்.மணி தெரிவித்துள்ளார். 

இஷ்ரத் வழக்கை சி.பி.ஐக்கு அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்துறை அமைச்சகம் தயாரித்த இரண்டு பிரமாணப்பத்திரங்கள் தொடர்பாக சதீஷ் வர்மா, ஆர்.வி.எஸ். மணியிடம் விசாரணை நடத்தினார். 2009-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த முதல் பிரமாணப்பத்திரத்தில் சி.பி.ஐ விசாரணையை எதிர்த்தது.அதற்கு காரணமாக,இஷ்ரத் உள்ளிட்டோர் லஷ்கர் – இ – தய்யிபா போராளிகள் என்று ஐ.பி கூறிய தகவலை சுட்டிக்காட்டியது. இதே ஐ.பி தகவலை காரணம் காட்டித்தான் குஜராத் அரசு போலி என்கவுண்டரை நியாயப்படுத்தியது. ஆனால், 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்த 2-வது பிரமாணப்பத்திரத்தில் ஐ.பி தகவலை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி சி.பி.ஐ விசாரணையைஆதரித்திருந்தது. 

05 July 2013

ஒன்பது தசாப்தங்கள் பொருத்தவர்களுக்கு ஏன் நான்கு வருடம் பொறுக்க முடியாமல் போனது :சேஹ் கர்ளாவி.....!!

ஒன்பது தசாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..!ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமான அரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் பிடிக்காது...
  • மன்னர் புவாதின் ஆட்சின் கீழ் 14 வருடங்கள், (1922-1936) 
  • மன்னர் பாரூக்கின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1936-1952) 
  • ஜமால் அப்துல் நாசரின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1954-1970) 
  • அன்வர் சதாத்தின் ஆட்சின் கீழ் 11 வருடங்கள் (1970-1981) 
  • ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் 31 வருடங்கள் (1981-2012)
இவ்வளவு காலம் பொறுத்த மக்களுக்கு ஏன்

11 June 2013

சுபஹு தொழுகையின் முக்கியத்துவம் (Importance of Subah)

யூதப் பெண் அமைச்சர் ஒருவரின் நேர்காணலைப் பத்திரிகையில் படிக்க நேர்ந்தது. கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர். “கடைசி காலத்தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறியுள்ளாராமே.. அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்..?” இதுதான் கேள்வி. அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா..? “ஆம். நாம் அதனை நம்புகின்றோம். ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்”.
“அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க,அப்பெண்மணி கூறினார் : “ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்று என்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்றுவேண்டுமென்றால் அது நடக்கலாம். அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை.” அப்பெண்மணியின் மதி நுட்பத்தைப் பாருங்கள். இஸ்லாமியச் சமூகத்தை எவ்வாறுஎடை போட்டு வைத்துள்ளார் என்பதைக் கவனியுங்கள்.

ஜம்இயதுல் உலாமாவை திட்டி தீர்பவர்களில் எத்தனை பேர் சுபஹு தொழுகையை ஜமாத்தாக நிறைவேற்றுகிறீர்கள்? நிறைவேற்றுபவர்களில் எத்தனை பேர்உங்கள் குடும்பத்தை தொழுகைக்காக எழுப்புகிறீர்கள்?

“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாகஇருக்கும் என கூறியுள்ளார்கள் . நாம் நயவஞ்சகன் அல்ல நயவஞ்சக சமுதாயம் (பெரும்பான்மையானவர்கள் என்பதால்..).

17 March 2013

பைபிளில் முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்பு..!

(நிதுர்) சமீபத்தில் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு முந்திய பைபிளில், ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அறிவித்திருப்பது வாடிகனில் தீப்பொறியாக பற்றிக்கொண்டது.

போப் பெனெடிக் XVI பார்க்க விரும்பிய, கடந்த 12 ஆண்டுகளாக துருக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பைபிள் கோஸ்பல் பரனபாஸ் என்பவரால் எழுதப்பட்ட பைபிள் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

தங்க எழுத்துக்களால் அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த பைபிள், 2000 ஆம் ஆண்டு துருக்கியில் ஒரு கடத்தல் நடவடிக்கையின்போது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஆரம்ப கால போதனைகளில் ஒன்றாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அதில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை பிரபல மேற்கத்திய ஆங்கில நாளிதழ் டெய்லி மிர்ரர் - DAILY MIRROR செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஹலால் இலச்சினையும் ஜம்மியத்துல் உலமாவின் புத்திசாலித்தனமான முடிவும்!!!


அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!!!
ஹலால் இலச்சினையை ஜம்மியத்துல் உலமா உள் நாட்டில் வாபஸ் பெற்றும் வெளி நாட்டு ஏற்றுமதிகளுக்கு மட்டும் ஹலால் என்ற ஒரு முடிவை அறிவித்து இருந்தது.

ஆனால் உலமா சபையின் அறிவிப்பு இலங்கை முஸ்லிம்களுக்கு பெரிய வெற்றியே என்று யோசித்து பார்க்கும் முஸ்லிம்களுக்கு புரியும் ...ஏனென்றால்--

1.ஹலால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொடுப்பதனால் இன்னும் ஹலால் செயன்முறை இலங்கையில் உள்ளது..இதன் மூலம் அந்நிறுவனங்கள் இரண்டு முறையில் தயாரிப்புகளை தயாரிக்க முடியாது..இதனால் அவர்களுக்கு பொருட்செலவே அதிகரிக்கும்...ஆகவே அவர்கள் எல்லாவற்றையும் ஹலால் முறையில் தயாரித்து பின்பு பொதி செய்யும் பொழுது ஹலால் முத்திரை வெளிநாட்டினருக்கும் இலங்கைக்கு ஹலால் முத்திரை இல்லாமலும் தான் தயாரிப்பார்கள்...இதன் மூலம் எந்த நிறுவனங்கள் வெளிநாட்டுக்கு ஹலால் செய்கிறார்களோ அவர்கள் முழுமையாக ஹலால் தான் செய்கிறார்கள்....இது மிகவும் பெரிய வெற்றி..


2.ஹலால் இருப்பதால் தான் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன என்று கூறினார்கள்..ஆனால் இப்பொழுது ஹலால் இல்லை எனும் பொழுது எல்லா ஹலால் பொருட்களும் விலை குறைய வேண்டும்...ஆனால் அது நடக்க போகவில்லை என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் கூறியுள்ளது..ஏனென்றால் ஹலால் அவர்களுடைய செலவில் எந்த ஒரு தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பதால்....இதன் மூலம் பொது பல சேனா பெரிய பொய்யர்கள் என்பதை காட்ட