Search This Blog

14 March 2014

ஓமர் முக்தாரின் போராட்டமும் ஈழப் போராட்டமும் ஒரு ஒப்பீடு...!

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி ' எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து (PART 09)

“ஓமர் முக்தார்” முசோலினியின் ஃபாசிச காலனியாதிக்க வெறியில் சீரழிந்த லிபியா நாட்டின் ‘முஸ்லீம் ’ போராளிதான் ஓமர் முக்தார். ஓமர் சுமார் 20 ஆண்டுகள் இத்தாலிய ஆதிக்க வெறியைச் சமாளித்து எதிர்த்து நின்று, 1931ல் ஒரு போரில் காயம்பட்டு, இத்தாலிய ராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, பழி சுமத்தப்பட்டு அவரது மக்களுக்கு முன்பாகவே தூக்கிலிடப்பட்டார்.

வியட்நாம் போரில் அமெரிக்கா உணர்ந்தது போல் இங்கு பெரும்படை கொண்ட இத்தாலி அரசு, சிறு கூட்டமாய் இருப்பினும் சொந்த மண்ணை விட்டுக்கொடுக்கக் கூடாதென்ற உணர்வில் உந்தப்பட்ட போராளிகளின் கொரில்லாப் போர்முறையைச் சமாளிக்க முடியாமல் திணறியது முசோலினியின் பாசிச இராணுவம் .

பிரபாகரன், எப்படி கொல்லப்பட்டார்...! - ஒரு புலனாய்வு ரிப்போர்ட்....!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரை புலிகளின் புலனாய்வு பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானே படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கின்றார் என அரசியல் அவதானிகளில் ஒரு சாரார் சந்தேகிக்கின்றனர்.

அரசியல் அவதானிகளில் ஒருவரான சித்திரெஜினா என்பவரால் எழுதப்பட்டு இருக்கின்ற கட்டுரை, இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டு இருக்கின்றஊகங்கள் இது போன்ற சந்தேகங்களை நியாயப்படுத்துவனவாகவும், வலுப்படுத்துவனவாகவும் உள்ளன.

கட்டுரையின் முதலாம் பாகத்தை உங்கள் வாசிப்புக்கு தருகின்றோம்.

“ சுமார் 38 வருடங்களுக்கு முன்.. பங்காளதேஷின் விடுதலை தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுடன் அவரது 11 வயது பாலகன் ஷேக் றூசல் கொல்லப்பட்டது போலவே.. சுமார் 4 வருடங்களுக்கு முன்.. தமிழீழ விடுதலை தலைவர் பிரபாகரனுடன் அவரது 12 வயது பாலகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டிருக்கிறான்.. அன்றும் இன்றும் இந்த‌ படுகொலைகள் நடந்த போது ஒன்றுமறியாத இந்த பச்சைப் பாலகர்களும் ஈவிரமிக்கமில்லாமல் கொல்லப்பட்டது மனித நேயத்தின் அடிப்படையில் ஒரு பஞ்சமா பாதகச் செயல் என்பதை எவராலும் மறுக்க முடியாது..

16 January 2014

இஹ்வான்கள் ஆட்சியில் தோற்கவில்லை

-பேரறிஞர் யூசுஃப் அல் கர்ளாவி -

கடந்த 22 ஆம் திகதி கட்டார் ”வதன்” தேசிய பத்திரிகைக்கு அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள் வழங்கிய நேர்காணலின் இறுதிப்பகுதியின் சுருக்கம் இது. அதனை மீள்பார்வை வாசகர்களுக்காக மொழிமாற்றம் செய்து தருகிறோம். நேர்கண்டவர் ஊடகவியலாளர் அஹ்மத் அலி.

* தற்போதைய எகிப்து அரசாங்கத்தை நீங்கள் எதிர்ப்பதற்கான காரணமென்ன?

சுமார் 60 வருடம் எகிப்து மக்கள் அடக்குமுறை ஆட்சியை அனுபவித்திருக்கின்றனர். ஜனவரி 25 புரட்சி எப்படியான புரட்சி என்பதை உலகம் அறிந்தே வைத்திருக்கின்றது.